தேசத்தின் திறல்கள் இருவரைத்தந்த
பாசத்தந்தை
பரமனடி சேர்ந்துவிட்டார்.
ஆசையாய் அவர் பெற்ற ஞானபூரணி அகிலமே வியக்கும் தாய்ப்புலியாக தாயகம் காக்க தனையீந்தார் ஆனந்தபுரத்திலே…
அக்கா விதுசாவாக
அறமும் வீரமும்
அன்பும் ஊட்டி
எமைவளர்த்த அன்னையாக,
அடக்குமுறைகளை தகர்த்தெறியக்கற்றுத்தந்த
அளப்பதற்கரிய
தளபதியாக தமிழர் விடுதலைப்பாதையில் ஆகச்சிறந்த மறப்பெண்ணாக
அக்கா என்றென்றும்
காவியத்தலைவியே…….
அவரை
எமக்குத்தந்த
அமரர் கந்தையா ஐயா
அரன்தாளடைந்துவிட்டார்.
மண்காக்க தன்னுயிர்க்கொடைதந்த
மாவீரன் தம்பி விதுசனை ஈன்ற தந்தை
ஈசனடி சேர்ந்துவிட்டார்.
ஈழதேசம் அவரை என்றென்றும் தொழுதுநிற்கும்
நேசத்தோடு பிள்ளைகள்நாம் வாடிநிற்கிறோம் வணக்கம்செய்கிறோம்
வீடுபேறு பெற்று ஐயாவின் உயிர் அமைதிகொள்ள்ளட்டும் ஆண்டவன் நிழலில்..
“பிள்ளைகள்”

இறுதிக் கிரியைகள் 13.10.2025 பொன்னாலையில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் இடம்பெறும்.




